திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பூச்சொரிதல் விழா : பக்தர்களுக்கு நீராகாரம் வழங்கிய கழக நிர்வாகிகள்
Feb 21 2020 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் நான்கு ரத வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்கள், அம்மனுக்கு காணிக்கையாக பூக்களை செலுத்தினர். அப்போது, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், பழனி சாலையில் பக்தர்களுக்காக நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் திரு. ராமுதேவர், அவைத்தலைவர் திரு. சவரிமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.