மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி : திரளான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு
Feb 21 2020 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், மயூர நாட்டியாஞ்சலி மற்றும் நாட்டிய, நாடகங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கலை விழாவின் முதல்நாள் நிகழ்ச்சிகள், மங்கள இசையுடன் தொடங்கியது. நாட்டியப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள் நடைபெற்றன. சிவதாண்டவம், கைலாயக்காட்சி, திருவிளையாடல் உள்ளிட்ட தலைப்புகளில் நாட்டிய நாடகங்கள் நடைபெற்றன. இதனை திரளான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.