கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கியது - பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Feb 20 2020 9:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஒட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் சிவாலயமான முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து காவி உடை உடுத்திய பக்தர்கள் கையில் விசறியுடன் கோவிந்தா! கோபாலா!! என்ற பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். இரவு முழுவதும் அனைத்து சிவாலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் நாளை மாலையில் 12-வது சிவாலயமான சஙக்ர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துகுடி மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாசிவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.