சென்னையில் ஐ.சி.எப்.யில் அமர்நாத் லிங்க தரிசனம் : தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி
Feb 19 2020 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் சென்னையில் ICF பேருந்து நிலையம் அருகே RPF விளையாட்டு மைதானத்தில், லிங்க தரிசனத்திற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மர்நாத் பனிலிங்கம், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் லிங்கம், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் லிங்கம், உள்ளிட்ட லிங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.