சீர்காழி அருகே ஸ்ரீ சுவேதாரன்யேஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்
Feb 13 2020 9:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம், சீர்காழி அருகே, திருவெண்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரன்யேஸ்வரர் கோவிலில், திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோவிலில், கடந்த 5-ம் தேதி இந்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, வினாயகர், முருகன், சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.