திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஐம்பொன்னால் ஆன மாரியம்மன் உற்சவர் சிலை கொள்ளை
Feb 12 2020 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, பழமைவாய்ந்த விநாயகர் ஆலயத்தில் இருந்த ஐம்பொன்னால் ஆன மாரியம்மன் உற்சவர் சிலையை மர்ம நபர்கள் கொள்யைடித்துச் சென்றனர். கோயில் பராமரிப்பாளர் பரமேஸ்வர் என்பவர், கோயிலை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த சிலைகளில் மாரியம்மன் சிலை மட்டும் மாயமானதைக் கண்டு, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.