அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மாபெரும் கலச விளக்கு வேள்வி
Feb 11 2020 8:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், மாபெரும் கலச விளக்கு வேள்வி நடைபெற்றது. இதில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் துணைத் தலைவர் திரு.கோ.ப.அன்பழகன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சு.ரவி ஆகியோர் பங்கேற்று, கலச விளக்கு வேள்வியை தொடங்கி வைத்து ஆன்மீக ஜோதியை ஏற்றி வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.