நெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழா : தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
Jan 20 2020 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழா தொடக்கமாக தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் 3 நாள் திருவிழாவாக பத்திரதீப திருவிழா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா லட்ச தீப விழாவாக 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான லட்ச தீப திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கிய நிலையில், 6ம் நாளான நேற்று தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. தை அமாவாசையான வரும் 24ம் தேதி கோயில் கொடிமரம் முன்பு அமைக்கப்படும் நந்தி தீபம் ஏற்றப்பட்டு கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் இரவு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும் 63 நாயன்மார் மர கேடயத்திலும் வீதி உலா செல்கின்றனர்.