திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் இலவச லட்டு - தேவஸ்தானம் அறிவிப்பு

Jan 19 2020 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்‍தர்களுக்‍கு கூடுதல் லட்டுகள் தேவைப்படும் பட்சத்தில், 50 ரூபாய் கொடுத்து கோவிலுக்கு வெளியே கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 12 கவுண்டர்களில் பெற்றுக்‍கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதற்காக நாள்தோறும் லட்டு உற்பத்தியை 3 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக தயாரிக்‍க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் நாளை முதல் நிறுத்தவுள்ளது. அதிகாலை சுப்ரபாத சேவையில் தொடங்கி இரவு வரை ஏழுமலையானை வழிபடும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00