குமாரபாளையம் சவுண்டம்மன் ஆலய தொட்டு அப்ப திருவிழா : மார்பில் கத்தி போட்டு இளைஞர்கள் வழிபாடு
Jan 17 2020 7:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சவுண்டம்மன் ஆலயத்தின், தொட்டு அப்ப திருவிழாவில், பக்தர்கள் தங்கள் மார்பில் கத்தியால் தாக்கி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கோயில் திருவிழா, கடந்த 10-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சாமுண்டி அழைப்பு வைபவத்தில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அம்மன் எழுந்தருளினார். அப்போது, விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள், தங்கள் மார்பில் கத்தி போட்டவாறு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.