அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதி தைத்திருவிழா கொடியேற்றம் : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jan 17 2020 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில், தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, முத்திரி கிணற்றிலிருந்து, முத்திரிப்பதம் கொண்டுவரப்பட்டு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து, பூஜித குரு திருக்கோடியை ஏற்றி வைத்தார். 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், வரும் 27-ம் தேதி திருத்தேரோட்டம் நிகழ்வு நடைபெறுகிறது.