அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன் சூரிய பகவானுக்கு காட்சி : காய்கறிகள், பழங்களால் நந்திக்கு சிறப்பு அலங்காரம்
Jan 16 2020 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையார் சூரியபகவானுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரசித்திபெற்ற திருவண்ணாமலை ஆலயத்தில் மாட்டுப்பொங்கலையொட்டி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நந்தி பெருமானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு
வகைகள் படையலிடப்பட்டு, காய்கறி, பழங்களால் ஆன மாலை சாற்றப்பட்டது. அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் தனித்தனியே வாகனங்களில் எழுந்தருளி, திட்டிவாசலில் சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர்.