நித்யகல்யாண பெருமாள் ஆலய இராப்பத்து உற்சவம் : நம்மாழ்வார் மோட்சத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி - பக்தர்கள் தரிசனம்
Jan 16 2020 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்திபெற்ற காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் ஆலய இராப்பத்து நிகழ்ச்சியின் 10-வது நாளில், நம்மாழ்வார் மோட்சத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி விமரிசையாக சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் நித்யக்கல்யாண பெருமாள் ஆலயத்தின் பகல்பத்து இராப்பத்து உற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் நித்தியக்கல்யாணப் பெருமாள் வீதியுலா வந்து மோட்சத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.