பொங்கல் திருநாளையொட்டி திருச்செந்தூர் கோயிலில் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள் - பாத யாத்திரையாக வந்து கடலில் புனித நீராடி தரிசனம்
Jan 14 2020 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக சென்று குவிந்து வருகின்றனர். தை மாதம் பிறப்பையொட்டி சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு காவடி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பொங்கல் திருநாளையொட்டி கோவில் அலுவலகத்தில், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.