சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்‍கு - சீராய்வு மனுக்‍கள் மீதான விசாரணை 3 வாரங்களுக்‍கு ஒத்திவைப்பு

Jan 13 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுக்‍கள் மீதான விசாரணை 3 வாரங்களுக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, சுமார் 50 மனுக்‍கள் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்டன. மனுக்‍களை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, வழக்‍கை, 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்‍கு, கடந்த நவம்பர் மாதம் மாற்றியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன்பு, இவ்வழக்‍கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என தெரிவித்த நீதிபதிகள், சபரிமலைக்குள் சட்டப்படி பெண்களை அனுமதிக்க இயலுமா என்பது குறித்து மட்டுமே விசாரிக்‍க உள்ளதாக கூறினார்.

இவ்வழக்‍கு விசாரணைக்‍கு ஆஜராகவுள்ள வழக்‍கறிஞர்கள், வரும் 17-ம் தேதி, உச்சநீதிமன்ற பதிவாளருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆலோசனைக்‍குப் பிறகு, விசாரணையில், எவ்விதமான விவாதங்களை வைக்‍க வேண்டும் என்று முடிவு எடுக்‍க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையொட்டி, வழக்‍கு​விசாரணை 3 வாரங்களுக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00