சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் ​​விவகாரம் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் விசாரணை

Jan 13 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் இன்று முதல் விசாரணைக்கு வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மனுக்களை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி திரு.பாப்டே, தலைமையிலான இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் திருமதி. பானுமதி, திரு.அசோக் பூஷன், திரு.நாகேஸ்வர ராவ், திரு.சந்தான கவுடா, திரு.அப்துல் நசீர், திரு.சுபாஷ் ரெட்டி, திரு.கவாய், திரு.சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை இன்று முதல் விசாரிக்கவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00