தூத்துக்குடி தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் ; பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீசார்
Sep 20 2014 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலின் தசரா விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி பக்தர்கள் அம்மனை வேண்டி, காளி, சிங்கம், குரங்கு, கரடி போன்ற வேடமணிந்து விரதம் இருப்பது சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் விழா குறித்து நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், விழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உலோகங்களால் ஆன பொருட்களை கோயிலுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு கருதி ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.