ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் சித்திரை தேர் திருவிழா - நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Apr 23 2014 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் சித்திரை தேர் திருவிழாவில், நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், சித்திரைத் தேர் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் 4-ம் நாள் நிகழ்வாக, கொள்ளிடக் கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, 4 சித்திரை வீதிகளின் வழியாக வலம் வந்தார். பின்னர் வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.