பிரசித்திப் பெற்ற வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபாட்டுக்காக குவிந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் - சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்பு
Apr 23 2014 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில், சித்திரை செவ்வாய்கிழமையை முன்னிட்டு, காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நவகிரக ஆலயங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக, நாகை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் திகழ்கிறது. ஆண்டுதோறும் சித்திரை மாத செவ்வாய்கிழமை அன்று சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சாட்டு ஊர்வலத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் உண்டியல் நிரம்பியதை அடுத்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஒரு கோடியே 59 லட்சம் ரூபாயும், 566 கிராம் தங்கமும், 7 ஆயிரத்து 530 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.