வேளாங்கண்ணி அருகே உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்
Aug 27 2014 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே 300 ஆண்டு பழமைவாய்ந்த மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியதும்பூரில் 300 ஆண்டு பழமைவாய்ந்த மீனாட்சியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து, குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி, யாகசாலையில் ஆராதிக்கப்பட்ட புனித கலசங்கள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, நாமக்கல்லில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதன் முடிவில் ரொக்கமாக 19 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய், 5 கிராம் தங்கம், 382 கிராம் வெள்ளிப் பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.