சென்னையில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் : கடையை சூறையாடி தி.மு.க-வினர் அராஜகம்
Oct 16 2018 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள உணவு கடை ஒன்றில், திமுக நிர்வாகியும், அவரது அடியாட்களும் புகுந்து, பொருட்களை சேதப்படுத்தி கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் பகுதியில், ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து நடத்துனரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியுமான தங்கபாண்டியன் என்பவர் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ரஜினியின் மைத்துனரும், அவரது நண்பர்களும் உணவு அருந்துவதற்காக சென்றுள்ளனர். உணவை அருந்திவிட்டு அவர்கள் பணம் கொடுக்காததால், அதனை கடையினர் உரிமையாளர் தட்டிக் கேட்டுள்ளார். தனது மைத்துனர் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால், ஆத்திரமடைந்த திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ரஜினி, அவரது அடியாட்களோடு உணவு கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன், நிர்வாகியையும், அவரது ஊழியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.