ஊரடங்கு அச்சம் கருதி திருப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்ப தயாராகும் வடமாநில தொழிலாளர்கள் - பின்னலாடை தொழில் மீண்டும் நலிவடையும் ஆபத்து
Apr 22 2021 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் கொரோனா பொதுமுடக்கம் அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பின்னலாடை தொழில் மீண்டும் முடங்கம் அபயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்த்தில் பின்னலாடை மிக முக்கிய தொழிலாக விளங்குகிறது. இந்த தொழிலை சார்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பின்னலாடை தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கொரோனா முழுமுடக்கம் வந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக சொந்த ஊர் திரும்பிகின்றனர்.
இதனால் தொழிலாளர்கள் இன்றி பின்னலாடை தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி 35 சதவீதம் குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
இப்பிரச்னையில் அரசு தலையிட்டு பொதுமுடக்கம் தொடர்பான அச்சத்தை புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்கனவே தொழில்கள் முடங்கி உள்ள நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் இதை, அரசு போக்கி, தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், பின்னலாடை தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.