சீனாவிலிருந்து சென்னை துறைமுகம் வந்த சரக்கு கப்பல் மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? - கப்பலில் இருந்து பொருட்களை இறக்கும் பணியில் ஈடுபட ஊழியர்கள் அச்சம்
Feb 19 2020 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள சரக்கு கப்பலில், மாலுமிகள் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அக்கப்பலில் இருந்து பொருட்கள் இறக்குமதி தாமதமாகியுள்ளது.
சீனாவில் இருந்து 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு மேக்னேட் என்ற கப்பல் நேற்று மாலை சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தது. கப்பலில் வந்த மாலுமிகள், ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாலுமிகள் இருவருக்கு கொரானா வைரஸ் அறிகுறி தென்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இருவரது ரத்த மாதிரிகளும், அடுத்தகட்ட பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால், சீன கப்பலுக்கு அருகே உள்ள கப்பலுக்கு சென்று பணி செய்ய ஊழியர்கள் அச்சமடைவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சீன கப்பலில் இருந்து பொருட்களை இறக்குவதும் தடைப்பட்டுள்ளது.