உலகப்புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்: காளைகளை அடக்கும் வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்
Jan 11 2019 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப்புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கும் வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் வரும் 16-ம் தேதியும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாடிவாசல் வர்ணம் பூசும் பணி முடிவடைந்ததையொட்டி, பார்வையாளர் இடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. காளையை அடக்கும் வீரர்களுக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன்கள் வழங்கும் பணி நாளை மறுநாள் நடைபெறும். இதேபோல், அலங்காநல்லூரில் காளையை அடக்கும் வீரர்களுக்கான முன்பதிவு நாளை நடைபெறுகிறது. காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி 14ம் தேதி நடைபெறுகிறது.