இந்தியா - ஆஸ்திரேலியா அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது
Dec 14 2019 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதிகாரிகளின் கூட்டு முயற்சியால், ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 இந்தியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள, 275 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 கிலோவும், ஆஸ்திரேலியாவில் 255 கிலோவும், போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்தியர்கள் 5 பேர், நைஜீரியர்கள் 2 பேர், அமெரிக்கா, இந்தோனேஷியாவை சேர்ந்த தலா ஒருவர் என 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.