வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் - இந்திய ராணுவம் வேண்டுகோள்
Dec 14 2019 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க, அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும், சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் இந்திய ராணுவம் குறித்து பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவிடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிலவி வருவதால், 26 கம்பெனி ராணுவத்தினர் முழு வீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.