குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோதி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்
Dec 12 2019 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம் மாநிலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, பிரதமர் நரேந்திர மோதியும், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே சந்திப்பு, கவுகாத்தியில் இருந்து, வேறொரு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே, வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், பிரதமர் திரு. நரேந்திர மோதியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பை, வடகிழக்கு மாநிலமான, அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இரு தலைவர்களும், வரும் 17-ம் தேதி மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த ஜப்பான் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே, கவுகாத்திக்கு பதில், டெல்லி அல்லது ஹைதராபாத் இல்லத்தில், மோதி - ஷின்சே அபே சந்திப்பு நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.