டெல்லியில் காற்று மாசு மீண்டும் மோசமான அளவை எட்டியது - ஆனந்த் விகார், நொய்டா பகுதிகளில் 450-ஐ எட்டியது காற்றின் தரக்குறியீட்டு எண்
Dec 12 2019 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் காற்று மாசு மீண்டும் மோசமான அளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, மாசு காரணியான PM 2.5-ன் தரக்குறியீட்டு எண், ஆனந்த் விகார் பகுதியில், 449-ஆகவும், நொய்டா பகுதியில் 416-ஆகவும் பதிவாகியிருந்தது. லோதி சாலை பகுதியில் PM 2.5-ன் தரக்குறியீட்டு எண் 357-ஆக பதிவானது. கடந்த வாரம் 150-ஐ எட்டியிருந்த காற்றின் தரக்குறியீட்டு எண், மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.