குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : பதவியை ராஜினாமா செய்தார் மும்பை ஐ.பி.எஸ். அதிகாரி
Dec 12 2019 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான், வங்கதேசம், அப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் காவல் துறை ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த திரு. அப்துர் ரஹ்மான் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக, சமூக வலைதளமான டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை பதிவு செய்யவே, இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.