ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3-வது கட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் : 17 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது
Dec 12 2019 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 17 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள 7 ஆயிரத்து 16 வாக்கு சாவடிகளில் 2 ஆயிரத்து 014 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட உள்ளதாகவும், தோ்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வினய்குமார் சௌபே தெரிவித்தார்ர். அடுத்ததாக வரும் 16 மற்றும் 20 ஆம் தேதிகளில் 4, 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பா் 23-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.