தெலங்கானாவில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதியில் தொடர்ந்து விசாரணை - தேசிய மனித உரிமை ஆணையம் 2-வது நாளாக இன்று ஆய்வு

Dec 8 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில், தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதாபாத்தில், பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும், அப்பெண் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைத்து, என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த என்கவுண்டருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த என்கவுண்டர் தொடர்பாக, 7 பேர் அடங்கிய தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள், ஏற்கெனவே நேற்று சம்பவ பகுதியில் ஆய்வு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக இன்றும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மெகபூப்நகர் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், அவர்களது குடும்பத்தினரிடமும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00