டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - பொதுமக்கள் கடும் அவதி
Dec 8 2019 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் மீண்டும் காற்று மாசு அளவு அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லி திர்பூர், சாந்தினி சவுக், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிகாலை முதலே காற்று மாசு ஏற்பட்டிருந்தது. காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட அளவீட்டின்படி, காற்று மாசு 370 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக காற்று மாசு குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்து வருவதால், டெல்லிவாழ் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிருடன் கூடிய பனிமூட்டமும், சாதகமான காற்று வீசாததாலும், காற்று மாசு மீண்டும் அதிகரித்திருப்பதாக, மத்திய காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆய்வு மையம், தகவல் தெரிவித்துள்ளது.