டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு

Dec 8 2019 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 43ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி ராணி ஜான்சி சாலையில் அமைந்துள்ள Anaj Mandi-ல் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரதமர் திரு.மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்‍கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00