நீதி வழங்குதல் என்பது, பழிவாங்கும் செயலாக மாறி விடக்கூடாது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கருத்து
Dec 8 2019 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதி வழங்குதல் என்பது, பழிவாங்கும் செயலாக மாறி விடக்கூடாது என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடைபெற்ற நீதிமன்ற திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே, கிரிமினல் வழக்குகளை முடித்து வைப்பதில் ஏற்படும் தொய்வு தொடர்பான மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நீதி என்பது எப்போதுமே உடனடியாக கிடைத்துவிடும் பொருளல்ல என்றுக் குறிப்பிட்ட அவர், அதே வேளையில், பழிவாங்கும் போக்கை நீதி எப்போதுமே கையில் எடுக்கக்கூடாது என்றும், அப்படி பழிக்குப்பழி என்ற நிலைப்பாட்டுக்கு மாறினால், நீதி தனது தன்மையை இழந்து விடும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவங்களை மனதில் வைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.