அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டது - டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
Dec 8 2019 10:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்யக்கோரி, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைகள் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர்பாண்டியன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதை, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.