உன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Dec 7 2019 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உன்னாவ்வில் பெண்ணின் வீட்டிற்கு சென்ற திருமதி. பிரியங்கா காந்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறும் நிலையில், பெண்களுக்கு இடமில்லாத மாநிலமாக உத்தரபிரதேசத்தை மாற்றியுள்ளதாக விமர்சித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஆண்டில் இருந்து மிரட்டப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்த பிரியங்கா, குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால்தான் அவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மாநிலத்தில் குற்றவாளிகள் மத்தியில் எவ்வித பயமும் இல்லை என்றும் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்தார்.