குஜராத்தில் உள்ள பட்டேல் சிலையை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் - நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வருகை
Dec 7 2019 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சிலையை பார்வையிட தினமும் 15 ஆயிரம் பயணிகள் பார்வையிட வருகின்றனர். குஜராத் மாநிலம், சர்தார் சரோவர் அணை அருகே, 182 மீட்டர் உயரம் கொண்ட, சர்தார் வல்லபபாய் படேலின் சிலை, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. mஇதற்கு, ஒற்றுமை சிலை என, பெயரிடப்பட்டது. இந்த சிலையை, தினம்தோறும், 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை, தினமும், 10 ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர். இது, அந்த சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.