மும்பை தாக்குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா கடும் குற்றச்சாட்டு
Dec 7 2019 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் 166 பேரின் உயிரைப்பறித்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதத் தலைவர்கள் இன்று வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட கசாப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதாகவும், அவர்களை, கைது செய்வது, பின்னர் விடுவிப்பது என பாகிஸ்தான் கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்தியா விமர்சித்துள்ளது.