ஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
Dec 7 2019 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவத்திற்கு, ஆயுத தொழிற்சாலை விநியோகிக்கும் வெடிபொருட்களின் தரம் குறைவாக உள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் ஆயுத தொழிற்சாலை வாரியம், நாடுமுழுவதும் 41 ஆயுத தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகிறது. அதில், சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த சி.ஏ.ஜி.-யின் தணிக்கை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தின், பீரங்கிகள், கவச வண்டிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு ஆயுத தொழிற்சாலை விநியோகிக்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவையாக இருப்பதாகவும், வெடிபொருட்களை பாதுகாப்பாக கையாளவும், அவற்றை திட்டமிட்ட இடத்தில் திட்டமிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்யவும் பயன்படும் ஃபியூஸ்களில் கோளாறு இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.