மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்
Dec 7 2019 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கித்துறையில் கடந்த காலங்களில் நிலவிய பிரச்னைகள், மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் தீர்ந்துவிட்டதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் திரு.மோடி, வங்கிகளை பாதுகாக்கும் விதமாக, திறமையான முடிவுகளை எடுக்க, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று கூறினார். வங்கி அதிகாரிகள், முக்கிய முடிவை எடுக்கும் முன்னர், அதனை, வங்கி அல்லது நிதித்துறை நிபுணர் ஆராய்வதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்தார். வங்கிகளை இணைப்பதிலும், மூலதனத்தை அதிகரித்து வலுப்படுத்துவதிலும், வாராக்கடன்களை வசூலிப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தியதாகவும் கூறினார். இதன்மூலம், வங்கித்துறையில் கடந்த காலங்களில் நிலவிய பிரச்னைகள் தீர்ந்து, சூழல் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் தற்போதைய சவால்களை சிறந்த எதிர்காலமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.