தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு
Dec 6 2019 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளர்.
தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் உறுப்பினர் ரேகா ஷர்மா இதுகுறித்து பேசியபோது, பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் நீதிபதி போல் இருந்து செயல்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த என்கவுன்ட்டரை, டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலையுண்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் திருமதி. ஆஷாதேவி வரவேற்றுள்ளார். நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என நீதிமன்றத்தையும், மத்திய அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.