ஐதராபாத்தில் பாலியல் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : போலீசாரை உற்சாகத்துடன் தூக்கி கொண்டாடிய மக்கள் - இனிப்பு வழங்கி, ராக்கி கயிறு கட்டி பெண்கள் மகிழ்ச்சி
Dec 6 2019 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா பாலியல் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், சைபராபாத் காவல்துறைக்கு மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும், இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்டனர். சைபராபாத் காவல் ஆணையராக பதவி வகித்து வரும் திரு. வி.சி சஜ்னார் தலைமையிலான காவலர்கள், குற்றவாளிகளை சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், காவல் ஆணையர் சஜ்னார் மற்றும் அவரது குழுவுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். போலீசாரை உற்சாகத்துடன் தூக்கி கொண்டாடி இனிப்பு வழங்கியதுடன், காவலர்களை வாழ்த்தி கோஷமும் எழுப்பினர். தெலங்கானா காவல்துறை, சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பெண்கள், போலீசாரின் கைகளில் ராக்கி கயிறை கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.