ஐதராபாத்தில் பாலியல் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெலங்கானா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை
Dec 6 2019 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைதராபாத்தில், பாலியல் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, தெலங்கானா மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நரசய்யபள்ளியைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த கொடூரக் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று போராட்டம் வலுத்தது.
இந்நிலையில், பெண் மருத்துவரை எரித்துக் கொன்ற இடத்திற்கு குற்றவாளிகளை இன்று அதிகாலை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது, போலீசார், குற்றவாளிகள் 4 பேரையும் சட்டுக்கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தெலங்கானா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளது.