மஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் விரைவிலேயே ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
Nov 22 2019 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், விரைவிலேயே ஆட்சி கவிழ்ந்து விடும் என்று மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில அரசியல் நிலவரம் குறித்து பேட்டியளித்த, பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான, திரு. நிதின் கட்கரி, சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இந்த கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்து விடும் என்றும் தெரிவித்தார்.