மகாராஷ்ட்ரா மாநிலத்தில் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்‍கும் விவகாரம் - , சிவசேனாவை சேர்ந்தவரே 5 ஆண்டுகளுக்‍கும் முதலமைச்சராக இருப்பார் என்ற அறிவிப்பால் புதி சர்ச்சை

Nov 22 2019 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்‍க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சிவசேனாவை சேர்ந்தவரே 5 ஆண்டுகளுக்‍கும் முதலமைச்சராக இருப்பார் என்று அக்‍கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எந்த கட்சிக்‍கும், தனிப் பெரும்பான்மை கிடைக்‍காத சூழலில், கடந்த 12ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்‍க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சி அமைக்‍க, 3 கட்சிகள் இடையே, இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே, அக்‍கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர், நள்ளிரவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டுக்‍கு சென்று முக்‍கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்ட்ராவில், சிவசேனாவை சேர்ந்தவரே 5 ஆண்டுகளுக்‍கும் முதலமைச்சராக இருப்பார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00