ஆசிரமத்தில் குழந்தைகளை அடைத்து சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் - சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பியோட்டம்
Nov 22 2019 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நித்யானந்தாவின் யோகினி சர்வயக்ஞ பீடம்' செயல்பட்டு வருகிறது. இதனை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதைசெய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர். வெளிநாட்டிற்கு தப்பியோடிய நித்யானந்தாவை வரவழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.