டெல்லியின் குடிநீரை நான் பரிசோதிக்கவில்லை - இந்திய தர ஆணையம் குடிநீரை பரிசோதித்தது : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி
Nov 21 2019 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியின் குடிநீர் மாதிரியை தான் பரிசோதிக்கவில்லை என்றும், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு தான் பரிசோதித்து முடிவுகளை வெளியிட்டது என்றும், மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றவை என்ற ஆய்வறிக்கையை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கிடைக்கும் தண்ணீர் சுத்தமாக உள்ளது என்றும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பொய்களை பரப்பி வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பஸ்வான், டெல்லியின் குடிநீர் மாதிரியை தான் பரிசோதிக்கவில்லை என்றும், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய தர ஆணையம் தான் பரிசோதித்தது என்றும், அதன் ஆய்வில், டெல்லியின் குடிநீர் குடிக்க தகுதியற்றவை என்று தெரிய வந்தது என்றும் குறிப்பிட்டார்.