ஐ.என்.எக்ஸ். மீடியா பணபரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இரு தினங்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
Nov 21 2019 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் 2 நாட்கள் நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ-யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் மனு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம், நாளையும், நாளை மறுதினமும், 2 நாட்கள், நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரு தினங்களும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.