முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் - பூகம்பமே வந்தாலும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என நீர்வளத்துறை அமைச்சர் திட்டவட்டம்
Nov 21 2019 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், பூகம்பமே வந்தாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று, முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேரளாவின் இடுக்கி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு. குரிய கோஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார். பூகம்பமே வந்தாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கடும் கூச்சல் காரணமாக, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.