டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடித் தாக்‍குதல் நடத்தியதைக்‍ கண்டித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்‍கட்சி எம்.பி.க்‍கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு

Nov 19 2019 10:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்‍குதல் நடத்தியதைக்‍ கண்டித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மீது போலீசார் தாக்‍குதல் நடத்தியதைக் கண்டித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகளின் எம்.பி.க்‍கள் இன்று கேள்வி எழுப்பினர். ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு, மாநிலங்களவைத் தலைவர் திரு. M. வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார். இதனைக்‍ கண்டித்து, எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்‍கப்பட்டது.

இதே பிரச்னை மக்‍களவையிலும் எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. Saugata Roy, காங்கிரஸ் எம்.பி, திரு. T.N. Prathapan, பகுஜன் சமாஜ் உறுப்பினர் திரு. Danish Ali உள்ளிட்டோர், நியாயமான கோரிக்‍கையை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினரை ஏவிவிட்டு தாக்‍குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00